Connect with us

தன்னை கல்யாணம் பண்ணிக்க பெண் கேட்டு அம்மா வீட்டுக்கே போயிட்டாரு.! கீர்த்தி சுரேஷுக்கே ஷாக் கொடுத்த நபர் யார் தெரியுமா..?

50c051ef 42d1 425c a863 a29c4330e8cb 1

சினிமா கிசுகிசு

தன்னை கல்யாணம் பண்ணிக்க பெண் கேட்டு அம்மா வீட்டுக்கே போயிட்டாரு.! கீர்த்தி சுரேஷுக்கே ஷாக் கொடுத்த நபர் யார் தெரியுமா..?

நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அடையாளம் காணப்பட்டார். அதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதையடுத்து ரஜினிமுருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Snapinsta.app 350089266 1247909755853322 335891508147993974 n 1024 1

Snapinsta.app 349442097 758175092677381 3200349701954831307 n 1024 1

விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். இவர் நடித்த அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார் இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது.

actress keerthy suresh 2

என்னை கல்யாணம் பண்ண அம்மா வீட்டுக்கே போய்ட்டாரு

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இவருக்கு லவ் லெட்டர் வருவதை குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதில் ஒருவரிடம் இருந்து இவருக்கு தொடர்ச்சியாக லவ் லெட்டர்கள் வந்து கொண்டிருந்ததாகவும் கல்யாணம் பண்ண சொல்லி முகவரியோடு அந்த லெட்டரில் பதிவிட்டு இருந்ததாகவும் கூறியிருந்தார்.

1d90a37a d8b6 4dba bc59 90cf723748d7

இன்னொருவர் கொஞ்ச நாட்களுக்கு முன்பு அவரின் வீட்டிற்கு தேடி வந்துவிட்டார். அவர் வேறு மாதிரி இருந்தார் நான் அந்த சமயம் வீட்டில் இல்லாத காரணத்தினால் வேலை ஆட்களிடம் தன்னை கணவர் என்று பாவித்துக்கொண்டு ஏன் அப்படி பண்றாங்க அந்த படத்துல ஏன் நடிக்கிறாங்க என்று கூறியுள்ளார். கேரளாவில் என் அம்மா வீட்டிற்கு போய் ஒரு நபர் பெண் கேட்டார் மேலும் சென்னை வீட்டில் வந்து எதற்கு உதயநிதி கூட எல்லாம் படம் பண்றீங்க என்று ஒருவர் கேட்டார் என்று சமீபத்து பேட்டியில் கூறியிருந்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top