பிரசாந்த்
தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான தியாகராஜனின் மகன். நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதால் 17-வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இவர் 1990 ம் ஆண்டு வெளியான “வைகாசி பொறந்தாச்சு” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் இவர் தனது முதல் திரைப்படத்திலேயே தனது அழகான தோற்றம் மற்றும் நடிப்பால் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.
தமிழில் இவர் செம்பருத்தி, திருடா திருடா, ஆணழகன், பூ மகள் ஊர்வலம், ஜீன்ஸ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஜீன்ஸ் திரைப்படம் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படம் இவருக்கு சினிமாவில் நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
இவர் இறுதியாக அடைக்கலம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். 2005-ம் ஆண்டு கிரகலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
சூப்பர் தகவல்
கிரகலட்சுமி கல்லூரியில் படிக்கும் போது தனது தோழியின் அண்ணனான வேணு பிரசாந்த் என்பவரை காதலித்து 1988-ல் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பின் இருவரும் அவரவர் வீட்டில் தனித்து வாழ்ந்து வாழ்ந்த நிலையில் அதை ஏற்று கொள்ளாத நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர்.
தற்போது 48 வயதாகும் நடிகர் பிரசாந்த்திற்கு இரண்டாவது திருமணம் செய்வதாக ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில் சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றுள்ளார். இதனால் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க தியாகராஜன் ஏற்பாடு செய்து வருகிறாராம்.