இயக்குனர் மிஷ்கின்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். முக்கியமான ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மிஷ்கின் நடிகராக மாவீரன் மற்றும் லியோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் லியோ படத்தில் விஜய்யுடன் ஏற்பட்ட நட்புப் பற்றி பேசிய அவர் “விரைவில் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்குவேன். அந்த படம் பேன் இந்தியா படமாக விஜய்க்கும் அவர் ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார். இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் டெவில் என்கிற படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தை இயக்குனர் மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இயக்கி உள்ளார். இவ்ர் ஏற்கனவே சவரக்கத்தி என்கிற படத்தை இயக்கியுள்ளார், டெவில் அவர் இயக்கும் இரண்டாவது படமாகும்.
நடிகை பாவனா உடன் தகாத உறவில் இருந்த மிஷ்கின்
இந்நிலையில் சித்திரம் பேசுதடி படம் வந்த புதிதில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துள்ளார். அப்போது மாணவர்கள் மிஷ்கின் இடம், “இந்த திரைப்படத்தின் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சந்தோஷம் அடைந்துள்ளீர்கள்” என்று கேட்டுள்ளனர். இதற்கு பதில் அளித்த அவர், நான் பாவனா உடன் இருந்த அந்தரங்க உறவு தான் என்னுடைய சந்தோஷம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு வித்திட்டது குறிப்பிடத்தக்கது.