நடிகை பாலாம்பிகா
விஜய், அஜித், கமல், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மறுத்ததால் பட வாய்ப்புகள், கைநழுவியதாக சீரியல் நடிகை ஒருவர் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சமீப காலமாகவே தென்னிந்திய திரையுலகில், மீடு மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்த பிரச்சனைகள் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகைகள் சிலர் தானாகவே முன்வந்து தாங்கள் எதிர்கொண்ட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சினைகளை வெளிப்படையாக தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகை பாலாம்பிகா மனம் திறந்து பேசியுள்ளார். பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்த ராமசாமி என்பரின் மகள் பாலாம்பிகா. தனது மகளை சினிமாவில் நாயகியாக மாற்ற வேண்டும் என்று விரும்பிய ராமசாமி, பாலம் என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, “நடிகன்” படத்தில் குஷ்புவுக்கு தங்கையாக, பாட்டுக்கு ஒரு தலைவன் என்கிற படத்தில், கேப்டன் விஜயகாந்த் தங்கையாக என பல முன்னணி நடிகர்களுக்கு தங்கையாக நடித்துள்ளார்.
அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் வாய்ப்பு
அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பாலாம்பிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் பகீர் தகவல்களை பகீர்ந்துள்ளார். அந்த பேட்டியில், “ அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என்று சொன்னார்கள். அதில் உடன்பாடு இல்லை. அதுவும் இல்லாமல் என் அப்பாவுக்கும் இதில் உடன்பாடி இல்லை. எனது திருமண வாழ்க்கையும் ஒழுங்காக அமையவில்லை. கணவர் சரியில்லை. அதனால் திருமணவாழ்க்கையை முடித்துக்கொண்டேன். நான் பல நாடுகளுக்கு சுற்றியிருக்கிறேன்.
நன்றாக சம்பாதித்தபோது கொஞ்சம் அதிகமாகவே ஆடிவிட்டேன்.அதனால் அனைத்தையும் இழந்துவிட்டேன். கொரோனா சமயத்தில் கஷ்டப்பட்டபோது நடிகர் சத்யராஜூவை தொடர்புகொண்டு உதவி கேட்டேன். அவர் என்னை வீட்டுக்கு அழைத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினார் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.