வில்லன் நடிகர் கராத்தே ராஜா
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ” விருமாண்டி ” படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் துணை வில்லனாகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் கராத்தே ராஜா. இதன் பின்னர் விஜய் நடித்தது ஹிட் ஆனா “கில்லி” படத்திலும் நடித்திருப்பார். மேலும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், போக்கிரி என பல ஹிட் படத்த்திலும் சப்போர்ட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதற்க்கு பிறகு வீரப்பனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான நாடகத்தில் முழுவதும் வீரப்பனாகவே வாழ்ந்து நடித்தார். சொல்லப்போனால் கராத்தே ராஜா அவர்கள் வீரப்பன் ஆகவே வாழ்ந்து வந்தார் என்று கூட சொல்லலாம்.
இவர் திவ்யா என்பவருடன் திருமணம் நடந்தது 2009ல் இந்த தம்பதிக்கு தற்பொழுது 3 பெண் குழந்தைகள் இருக்கிறது இவர்கள் இருவரும் 2014 ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா வீட்டை விட்டு வெளியேறினார். அதனால் உடனடியாக கராத்தே ராஜா மனைவியை காணவில்லை என போலிஸில் புகார் கொடுத்தார் அதன் பின்பு மீண்டும் வீடு வந்து சேர்ந்தார் திவ்யா, தற்பொழுது வரை இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். கடைசியாக “மன்னர் வகையறா” படத்தில் நடித்துள்ளார்.
திடீரென வைரலான புகைப்படங்கள்
தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் திடீரென வைரலாக முதல் முறையாக இந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் ராஜாவுக்கு இவ்வளவு அழகான மனைவியா என கமெண்டடித்து வருகின்றனர்.