தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லியோ படப்பிடிப்பிற்கு இரு நாட்கள் லீவ் போட்டுவிட்டு பொதுத்தேர்வில் வெற்றிப்பெற்ற முதல் மூன்று இடத்தினை பிடித்த மாணவ மாணவிகளை சந்தித்து ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் தமிழ் நாட்டில் முதல் இடத்தினை பிடித்த நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக வழங்கினார்.இந்த செய்திதான் இணையத்தில் தற்போது வைரல் என்றே சொல்லலாம்.
மேலும் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பேசிய விஜய், சோசியல் மீடியாவில் தகவல் இருக்கிறதை போல முக்கால் வாசி போலியானது தான்.அப்படி சோசியல் மீடியாவில் போடுகிற, நான் எல்லாரையும் சொல்லல, ஒருசில பேருக்கு கவர்ச்சிகரமான தகவலை வெளியிடுவதாக நினைத்து சிலவற்றை போலியாக வெளியிடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
இது யாரை குறிவைத்து சொன்னார் என்று தெரியவில்லை ஆனால் இந்த பேச்சு விஜய் பற்றிய பல கேள்விகளுக்கு பதிலை கொடுத்துள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
விஜய் அப்பாவை கைவிட்டுவிட்டார், மனைவி சங்கீதாவுடன் விவாகரத்து, நடிகைகளுடன் தொடர்பு, இரண்டாம் திருமணம் என்று பல வதந்தி செய்திகளுக்கு விஜய் இதன்மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.