தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவில் பிறந்து வளர்ந்த அஞ்சலி கற்றது தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
10 ஆம் வகுப்பு படித்திக் கொண்டிருந்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அஞ்சலி, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இடையில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து வந்த அஞ்சலி ஒரே வீட்டில் இருவரும் இருந்து வந்துள்ளனர்.
அதன்பின் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தற்போது தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு பக்கம் சென்று நடித்து வருகிறார். இந்நிலையில் அஞ்சலி பற்றி பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பகீர் தகவலை கொடுத்துள்ளார்.
ஜெய் – அஞ்சலி காதலித்த போது இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று கூறினார்கள். அதன்பின் அதெல்லாம் பொய் என்று கூறினார்களே தவிர காதலிக்கிறோம் என்று மறுப்பு தெரிவிக்கவில்லை. 90ஸ் காலக்கட்டத்தில் நடித்த நடிகை ஒருவர் எப்போதும் சோகமாக இருப்பார்கள்.
அப்போது பேட்டியளித்த அவர் என்னுடைய சித்தி என்னை கட்டாயப்படுத்தி பல விசயங்களை செய்ய சொல்கிறார்கள் என்று ஓப்பனாக கூறியிருந்தார். தற்போது திருமணமாகி நன்றாக இருக்கிறார் அந்த நடிகை.
அதேபோல் தான் அஞ்சலிக்கு ஒரு தடையாக மாறி மோதலாக மாறியது. ஒரு சமயத்தில் சித்தியை விட்டு அஞ்சலி ஓடிவிட்டார். ஒரு இயக்குனர் தான் அஞ்சலியையும் அவரது சித்தியையும் ஆட்டிப்படைத்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் அப்படியொன்றும் இல்லை என்று அந்த இயக்குனர் கூறிவிட்டார். அதன்பின் சித்தியின் டார்ச்சர் தாங்க முடியாமல் சினிமாவே வேண்டாம் என்று ஆந்திராவுக்கே ஓடிவிட்டார் அஞ்சலி. தனிமனித சுதந்திரம் இல்லை என்று தெலுங்கில் இருக்கும் தயாரிப்பாளரின் உதவியுடன் வாய்ப்பு கேட்டு நடித்து வருகிறார்.