தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சின்னத்திரை தொடர்களில் வில்லி, ஹீரோயினாக நடித்து அசத்தி வருபவர் தான் நடிகை நீலிமா.சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டு இடங்களிலும் நடித்திருக்கும் ஒரு சில நடிகைகளில் இவரும் ஒருவர்.
இவர் நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்ரமணியம், மொழி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருப்பார். சமீபத்தில் வெளியான ஆகஸ்ட் 16, 1947 எனும் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் அம்மாவாக நடித்திருப்பார்.
அவ்வப்போது இவரை பற்றிய செய்திகள் இணையத்தில் வலம்வந்த வண்ணம் இருக்கும்.இவர் வயது அதிகமானவரை திருமணம் செய்துகொண்டதாக கிசுகிசுக்கள் அவ்வப்போது இணையத்தில் வலம்வரும்.
இந்தநிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை நீலிமா பங்கேற்றார். அதில் அவரை குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அதில் பயங்கரமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.
அதில் நீலிமாவின் முதல் கணவர் யார் என்ற கேள்வி அதிகம் தேடப்பட்டது. இதற்கு பதில் அளித்த நீலிமா, எனக்கு ஒரே கணவன் இசைவானன் தான். என்னுடைய முதல் கணவரும் அவர் தான் இரண்டாம் கணவரும் அவர் தான் என்று கூறியுள்ளார்.