வாரிசு நடிகர்கள் சினிமாவில் ஆளுமை காட்டுவது போல வாரிசு நடிகைகள் காட்டுவதில்லை என்பதுதான் உண்மை.அந்தவகையில் மிக முக்கியமான ஒரு நடிகைதான் வரலக்ஷ்மி சரத்குமார்.
தமிழ் சினிமாவில் ஹீரோயின், வில்லி என வித்தியாசமான கதைகளில் நடித்து மக்களை கவர்ந்து வருபவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது வரலட்சுமி பாம்பன், பிறந்தாள் பராசக்தி, லகம், வண்ணங்கள், சபரி போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் ஒரு பார்ட்டிக்கு சென்று இருந்தேன். அப்போது ஒரு நபர் என்னை பின்னாடி அடித்துவிட்டார்.
அப்போது கோபத்தில் அந்த நபரை பயங்கரமா அடித்துவிட்டேன். இனி அந்த நபர் மற்ற பெண்கள் மீது கைவைக்க கூடாது என்ற அளவிற்கு நான் அடித்தேன் என்று கூறியிள்ளார்.