நடிகர் ரஞ்சித்
வெள்ளித்திரை நடிகைகள் பலரும் சின்னத்திரை பக்கம் சென்றால் தனது மார்க்கெட் குறைந்துவிடும் என சொல்வது காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் ஒருவர் 90 காலகட்டத்திலேயே வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார் நடிகை பிரியா ராமன்.
ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியான வள்ளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் பிரியா ராமன் அதன் பின் இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என மாறி மாறி படித்து வெற்றி கண்டாலும் சின்னத்திரையிலும் ம் கலந்துகொண்டு வலம்வந்தார்.
மீடியோ உலகில் சிறப்பான பயணத்தை மேற்கொண்டிருந்த இவர் நடிகர் ரஞ்சித்தை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
15 வருடங்களாக சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் திடீரென 2014ஆம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின் நடிகை பிரியாராமன் திருமணம் செய்து கொள்ளாமல் சினிமாவில் ஈடுபட்டு வருகிறார்.
ரஞ்சித் பற்றி தெரியாத தகவல்கள்
இந்த விவாகரத்துக்கு காரணம் நடிகை ராதாசுதா-வுடன் இருக்கும் தொடர்பு என்று பேசப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக விவாகரத்து செய்த அடுத்த சில மாதங்களிலேயே ராகசுதாவை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ரஞ்சித்.
நடிகை ராகசுதா பல நடிகை கே ஆர் விஜயாவின் சகோதரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ராகசுதாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம் நடிகை கே.ஆர்.விஜயாவின் மருமகன் ஆனார் ரஞ்சித்.ஆனால், இந்த திருமணம் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே ராஜசுதாவை பிரிந்தார் நடிகர் ரஞ்சித்.
ராகசுதாவை பிரிந்த ரஞ்சித் தனியாக இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய முதல் மனைவி பிரியா ராமனை சந்தித்து மீண்டும் அவரையே திருமணம் செய்து கொண்டு கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.