விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். மேலும் ஆரம்ப காலகட்டத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் நடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி தற்போது படிப்படியாக உயர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதன்முதலில் விஜய் சேதுபதி வில்லனாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்ததால் ரசிகர்கள் இவரின் நடிப்பை பெரிதும் பாராட்டி வந்தனர்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து, இந்தியளவில் கவனம் பெற்று வருகிறார். சினிமாவில் ஹீரோவாக மட்டும் இல்லாமல், வில்லனாகவும் கலக்கி வருகிறார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படம் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் மூலம் விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டில் பெரிய ஓபனிங் கிடைக்கும் என சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
விஜய் சேதுபதி குறித்து பிரபலம் பேச்சு..
மேலும் தமிழா தமிழா பாண்டியன் பேசியிருக்கும் இந்த பேச்சானது இணையத்தில் தற்போது பேசும் பொருளாக மாறி ட்ரெண்டிங் ஆன விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் இந்த பேச்சு குறித்து ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்லி விஜய் சேதுபதி பற்றி பேசி வருகிறார்கள்.
மேலும் அவரது உண்மையான நிலை என்ன என்பதை அவர் வெளியிட்டால் மட்டுமே தெரிய வரும் இல்லை என்றால் இது போன்ற கிசு கிசுக்கள் மற்றும் பேச்சுக்கள் இணையங்களில் அதிக அளவு உலா வரும் என சொல்லலாம்.