வனிதா
நடிகர் விஜயகுமார்,நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜயுடன் இணைந்து “சந்திரலேகா” என்ற திரைப்படத்தில் நடித்தார். பின் திருமணமானதால் தன் நடிப்பை நிறுத்திவிட்டு திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.
நடிகர் ஆகாஷை திருமணம் செய்த வனிதா அவருடன் நன்றாக வாழ்ந்து வந்தார். ஆகாஷ் மற்றும் வனிதா விஜயகுமார் அவர்களுக்கு விஜய ஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார். பின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கலில் ஆகாஷும் வனிதாவும் பிரிந்தனர்.
எனவே வனிதா விஜயகுமார் ஆனந்த் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவருக்கும் வனிதா விஜயகுமாருக்கும் பிறந்த மகளின் பெயர் ஜெயநீதா. நீதிமன்றத்தில் ஆகாஷ் தொடர்ந்த வழக்கின் பேரில் தன் மகன் விஜய் ஹரியை முதல் கணவர் ஆகாஷிடம் ஒப்படைத்தார்.
போர் அடிச்சுச்சு.. அதனால கர்ப்பம் ஆனேன்:
அந்த கதையே வேற…. ஆனால், அது மிகவும் அழகான மிகவும் போல்டான கேரக்டர். ஏற்கனவே அந்த கேரக்டர் மலையாள படம் ஒன்றில் வந்துவிட்டது.
இது தமிழில் தற்போது உருவாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்கும்போது உங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும்… மிகவும் தைரியமான ஒரு கேரக்டராக அந்த கேரக்டர் அமைந்துவிட்டது என வனிதா விஜயகுமார் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதில் கிட்டத்தட்ட நான்கு பெண்களின் வித்தியாசமான கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு பெண்களுமே கர்ப்பமாக இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவது தான் அந்த திரைப்படம். அந்த போட்டோவை போட்ட உடனேயே அது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிவிட்டது.
நியூஸ் திறந்தாலே நான் கோபிநாத் சாரால் கர்ப்பமாகிவிட்டேன் என செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தான் தருகிறது. இந்த வயசிலும் நான் இந்த அளவுக்கு ட்ரெண்டிங்கில் பேசப்படுவதே கடவுள் கொடுத்த ஆசீர்வாதம் தான்…. என மகிழ்ச்சி பொங்க வனிதா விஜய்குமார் பேசினார்.