Connect with us

லாரன்ஸ் படத்தில் நடித்தது தான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு.! திருநங்கை பிரியா கண்ணீர் பேட்டி.!

Untitled Project 33 1

சினிமா செய்திகள்

லாரன்ஸ் படத்தில் நடித்தது தான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு.! திருநங்கை பிரியா கண்ணீர் பேட்டி.!

ராகவா லாரன்ஸ்

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் நுழைந்தார்.  இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் ஆனார். தற்போது இவர் நடிகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.

image 885

சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ருத்ரன். இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.

image 884

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் பேயை மையப்படுத்திய கதை உருவாக்கப்பட்டிருந்தது. காஞ்சனா முதல் பாகத்தில் ஒரு திருநங்கை தங்கள் வாழ்வில் சந்திக்கும் இன்னல்களும், அவர்கள் படும் கஷ்டத்தையும், அவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் போன்ற ஒரு நல்ல கருத்தை காட்டியிருப்பார்.

kanchana

திருநங்கை பிரியா கண்ணீர் பேட்டி

நடிகர் சரத்குமார் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது பெரும் வலுவாக இருந்தது. இவருக்கு மகள் கதாபாத்திரத்தில் திருநங்கை பிரியா நடித்திருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், காஞ்சனா படத்தில் நடித்து மிக பெரிய தவறை நான் செய்து விட்டேன்.

sarath kumar kanchana 024

அந்த படத்தில் நடிப்பதற்கு முன்புஎன்னுடைய வாழ்க்கை சாதரணமாக போய்க்கொண்டு இருந்தது. ஆனால் காஞ்சனா படத்தில் பின் பலரும் நான் கோடியில் சம்பாதித்து விட்டேன் என நினைக்கிறார்கள். அந்த படத்திற்கு பின் எனக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.

1 432

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top