நடிகை பாப்ரி கோஷ்
சீரியல் நடிகை பாப்ரி கோஷ்டியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ்.
நாயகி தொடரில் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இவர் தற்போது பாண்டவர் இல்லம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
அதுமட்டுமின்றி வெள்ளித்திரையில் விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா மற்றும் சர்கார் படத்திலும், சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்திலும் நடித்துள்ளார். அஜீத் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் தடம் பதித்துள்ளார்.
ஓப்பன் டாக்
சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பாப்ரி கோஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நபர்களுக்கு நீங்கள் கொடுக்கும் பதில் என்ன…? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த நடிகை பாப்ரி கோஷ் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார் கள் என்றால் நான் கண்டிப்பாக ஒப்புக் கொள்வேன். ஆனால் அதில் ஒரு சிறு கண்டிஷன் இருக்கிறது. குறிப்பிட்ட நபர் என்னை பட வாய்ப்பு அழைக்கிறார் என்றால் அந்த இடத்திலேயே ஓகே சொல்ல மாட்டேன்.
அவருடைய வீடு எங்கே இருக்கிறது.. அவருடைய வீட்டில் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் எப்போது இருப்பார்கள்.. என்று பார்ப்பேன். தன்னுடைய அம்மா, மகன், மகள், மனைவி என அனைவருடனும் அந்த நபர் இருக்கும் பொழுது அந்த இடத்திற்கு சென்று சார் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு சம்மதித்தால் பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறினீர்களே.
நான் தயார்.. என்று அனைவரும் முன்னாலும் முத்தம் கொடுத்து கூறுவேன். இதுதான் அந்த நபருக்கு நான் கொடுக்கக்கூடிய பதில் என்று குண்டை தூக்கி போட்டு இருக்கிறார் நடிகை பாப்ரி கோஷ்.