நடிகை மீனா
90’களில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்.
குழந்தை நட்சத்திரமாக நடிகர்கள் சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களில் நடித்திருக்கும் நடிகை மீனா ஒரு கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாகும் அளவுக்கு தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்தார். சினிமாவில் உச்ச கட்டத்தில் இருந்த போதே இவர் 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.
தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை மீனா இடையில் மிகப்பெரிய ஒரு இழப்பை எதிர்கொண்டார். தன்னுடைய கணவரை விசித்திரமான நுரையீரல் நோய் ஒன்றினால் இழந்தார் நடிகை மீனா.
இந்த சோகத்தில் இருந்த நடிகை மீனாவை அவருடைய தோழிகளான நடிகைகள் ரம்பா, சங்கீதா மற்றும் நடன இயக்குனரான கலா மாஸ்டர் மற்றும் இன்னும் சிலர் அவருடைய மனதை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்க முயற்சி செய்திருக்கின்றனர்.
சர்ச்சை நடிகர் குறித்து நடிகை மீனா பேச்சு..
இந்நிலையில், நடிகை மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லால் குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். இதில் த்ரிஷ்யம் மலையாள திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலுக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மீனா.
இந்த படத்தின் நடிக்கும் பொழுது நைனிகா கைக்குழந்தை. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது ஒரு குக்கிராமம்.. அங்கே முறையான இன்டர்நெட் வசதி கிடையாது.. மருத்துவ வசதி கிடையாது. எனவே குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே பார்ப்பதற்கு மருத்துவமனை வசதி கூட கிடையாது.
மருந்து வாங்குவது என்றால் கூட நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம்.. குழந்தை இருக்கிறது என்பதன் காரணமாக நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறினேன்.