ஐஸ்வர்யா – தனுஷ்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார்.
இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்தவர்கள் தான் தனுஷ்- ஐஸ்வர்யா, இவர்கள் கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.
இதனிடையே, நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘பயணி’ ஆல்பத்திற்கு நடிகர் தனுஷ் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் நன்றி தெரிவித்தார். இதனால் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
பிரபலம் உடைத்த ரகசியம்..
ஆரம்ப நாட்களில் ஐஸ்வர்யா தனுசை விரும்புவதாக சொல்லும் போது லதா ரஜினிகாந்த் அதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை. மேலும் அவர்களை காதலில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். இதனை அடுத்து சில பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு தான் அவர்கள் திருமணம் சுமுகமாக நடந்தது.
அப்படிப்பட்ட இவர்களது மன வாழ்க்கை யார் கண் பட்டதோ தெரியவில்லை. இப்படி ஆளுக்கு ஒரு திசையில் தனி த்தனியாக வாழக் கூடிய வகையில் மாறிவிட்டது என பிரபலம் பத்திரிக்கையாளர் சுபைர் தெரிவித்து இருக்கின்ற கருத்தானது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை சொல்லி இப்படி இருவரது வாழ்க்கையும் வீணாய் போக குழந்தைகளின் நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.