பிக்பாஸ் கேப்ரில்லா
கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அந்த நடன நிகழ்ச்சியில் தனது சிறப்பான நடனத்தால் இறுதிச்சுற்றில் வெற்றிபெற்று டைட்டில் வின்னர் ஆனார்.
அடுத்தடுத்து சின்ன திரையில் வாய்ப்புகள் வர . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.கேப்ரியல்லாவின் சிறப்பான நடிப்பும் , அசத்தலான நடனமும் அவருக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.
கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.
இணையத்தில் வெளியான ஆபாச புகைப்படங்கள்..
இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியில் இருந்த அனைவரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அந்த சமயங்களில் மனம் வேதனை பட்டது. இதனை வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாது என்று கேப்ரில்லா சொன்ன விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
மேலும் இது போன்ற பல விஷயங்கள் இணையங்களில் பரவி வருவதும் அதற்கு பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்த வகையில் deep fake முறையின் மூலம் பிரபல நடிகையின் புகைப்படங்கள் தாறுமாறாக இணையத்தில் வெளி வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
அது போலவே அன்று கேப்ரில்லாவுக்கு நிகழ்ந்ததை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இது போன்ற அவலத்திற்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை யோசித்து விரைவில் வைப்பது நல்லது என்று சொல்லி இருக்கிறார்கள்.