சூர்யா
கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வரும் சூர்யா பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றி திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்க்கு அளித்து வருகிறார். தற்போது குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகி இருக்கிறார் சூர்யா.
மேலும், மும்பையில் சூர்யா சில பிஸ்னஸ்கள் செய்து வருவதாகவும், விமான நிலையத்தில் கார் பார்க்கிங் ஏலம் எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மும்பையில் செட்டிலாகி இருக்கும் நடிகர் சூர்யா 68 கோடி மதிப்புடைய பிரமாண்ட வீடு ஒன்று அங்கேயே வாங்கி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்காராவுடன் தனது 43-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெருமிதத்தில் சூர்யா….
தற்போது தேவ் தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது கராத்தேவில் அவர் பிளாக் பெல்ட் பெற்று இருக்கின்றார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா அவரது தந்தை சிவக்குமார் மற்றும் அவரின் மனைவி கலந்து கொண்டு உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.