பல வித்தியாசமான கதைகளில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து அசத்திருப்பார்.
தமிழ் சினிமாவில் தற்போதும் முக்கியமான இடத்தில இருக்கும் ஜெயம் ரவி நல்ல படங்களை குறிவைத்து நடித்துவருகிறார்.இவருடைய கதைத்தேர்வு தனித்தன்மையுடன் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே வைத்துள்ளார்.
தற்போது ஜெயம் ரவி இறைவன், சைரன் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.நடிகர் ஜெயம் ரவி 2009 -ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
அவரே சொன்ன தகவல்
இந்நிலையில் எடிட்டர் மோகன் பிறப்பால் ஒரு இஸ்லாம் மதத்தை சார்ந்தவராம், அவருடைய மனைவி வரலட்சுமி பிராமினாம். இவர் சிறுவயதிலேயே தங்கவேலு என்பவர் வீட்டில் வளர்ந்தாராம். அவர் தான் தன் பெயரை மோகன் என்று மாற்றியதாகவும், தங்கள் திருமணம் 3 முறை நடந்ததாகவும் மோகன் கூறியுள்ளார்.
மேலும், நான் மதம் விட்டு திருமணம் செய்ததாக பலர் கூறினாலும், உண்மையில் நான் மனம் விட்டு தான் திருமணம் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். மோகன்ராஜா அடுத்து தன் தம்பி நடிக்கவிருக்கும் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை தான் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.