தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை திரிஷா . மேலும் சில வருடங்களுக்கு முன்பு மார்க்கெட் இல்லாமல் இருந்து வந்த திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது . இதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்கள் என்ற அந்தஸ்த்தில் கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகை திரிஷா. இப்படி இருந்த நிலையில் கடந்த வருடம்,
நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி அவதூறாக பேசி அதிர்ச்சியை கிளப்பி இருந்தார் . அந்த பிரச்சனை முடிந்த நிலையில் அடுத்த பிரச்சனை திரிஷாவுக்கு வந்துள்ளது . அதாவது அதிமுகவின் முன்னாள் ஒன்றிய செயலாளரான ஏவி ராஜு திரிஷாவை பற்றி தேவையில்லாமல்,
பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார் . இதனால் தற்போது அரசியலுக்கு வருவதற்கு முடிவெடுத்துள்ளாராம் நடிகை திரிஷா . அந்த வகையில் என்னதான் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் அரசியல் பலம் இருந்தால் மட்டுமே எதையும் செய்ய முடியும் என்று நினைத்திருக்கிறார் திரிஷா.
இதனால் நடிகர் விஜய்யின் கட்சியில் சேர்வதற்கு முடிவெடுத்துள்ளாராம் நடிகை திரிஷா. அதாவது எப்படி எம்ஜிஆருக்கு ஜெயலலிதா இருந்தாரோ , அதேபோல விஜய்க்கு நடிகை திரிஷா இருக்க போவதாக கூறப்படுகிறது. இதனால் பலரும் நடிகை திரிஷாவை அடுத்த ஜெயலலிதா என்று கூறி வருகின்றனர்…