ரச்சிதா மகாலட்சுமி
சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார்.
இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது.
2 ம் திருமணம்..?
இந்நிலையில் நடிகை ரச்சிதா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் குறித்து வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், ரக்ஷிதா மகாலஷ்மி இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறாராம். தன்னுடைய முதல் கணவர் தினேஷ் உடன் முறைப்படி விவாகரத்து பெற்ற பின் இவர்களுடைய திருமணம் குறித்து அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறுகிறார்கள். ஏற்கனவே இப்படி ஒரு வதந்தி இணைய பக்கங்களில் கிளம்பியது.