நடிகை திரிஷா
தமிழில் வெளிவந்த ஜோடி என்ற படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. அதனைத் தொடர்ந்து அவர் மௌனம் பேசியதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
பின்னர் திரிஷா ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஸ்டாராக வலம் வந்தார்.
இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த அவர் இடையில் சில காலங்கள் மார்க்கெட் இழந்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். பின்னர் 96 படத்தின் மூலம் அசத்தல் கம்பேக் கொடுத்த திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்திருந்தார்.
அப்படத்தில் அவர் கொள்ளை அழகில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். 40 வயதாகியும் இன்னும் இளமையுடன் காட்சியளிக்கிறார் நடிகர் திரிஷா. தற்போது நடிகர் விஜயின் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அதிர்ச்சி ஆகிடுவீங்க
சமீபத்தில் திரிஷாவுக்கு ஒரு கோடி மதிப்புள்ள நெக்லஸை விஜய் பரிசாக கொடுத்ததாக தகவல் வெளியானது. இதுவும் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது . இப்படி இருக்கும் நிலையில் விஜய் அரசியலுக்கு வந்ததும் அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.
அது என்னவென்றால் நடிகை திரிஷா விஜய்யின் வீட்டு பக்கத்திலேயே 35 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கி இருக்கிறாராம் . இதுவும் தற்போது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.