விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் தமிழக மக்களிடையே பெரும் கவனத்தைப்பெற்றது பாரதி கண்ணம்மா. இதை வைத்து பல மீம்களும் வெளியாகி இருந்தன. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், டிஆர்பிஇல் உச்சத்தையும் பெற்ற தொடர்களில் இதுவும் ஒன்று.
அட்ஜஸ்மென்ட் என்பது சினிமாவில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் இருக்கிறது என்று பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் மது என்கிற கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பிரசாத் சின்னத்திரையில்
அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ஓகேவா என்று தான் தன்னிடம் நேரடியாக சிலர் கேட்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி யிருக்கிறார். தற்போது ரேஷ்மா பிரசாத் கொடுத்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் இவருடைய துணிச்சலை பாராட்டி வருகிறார்கள்.
அவரே கூறிய உண்மை
இந்த நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் மது கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரேஷ்மா பிரசாத் தனக்கு நடந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், “சின்னத்திரையில் சிறிய அளவில் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய உங்களுக்கு சம்மதம் இருந்தால் கதாபாத்திரம் எளிதில் கிடைக்கும் என்று பலரும் கூறினார்கள்.