இளையராஜா
தமிழ் சினிமாவில் இசை மாமேதையாக இருப்பவர் இளையராஜா. இவரின் இசையின் வழியாக ரசிகர்களை கட்டி போடும் திறமை இவருக்கு அதிகமாகவே இருக்கிறது என்று கூறினால் மிகையாகாது.
‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். 70 தொடக்கங்களில் இருந்து இசையமைத்துக் கொண்டிருக்கும் இளையராஜா, சமீபத்தில் ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
இசையை பாராட்டி வரும் பல ரசிகர்கள் அவரின் பேச்சை வெறுத்து வருகின்றனர். அவர் இசையை மட்டும் தான் கேட்க முடியும் அவர் பேச்சை கேட்க முடியாது என்றும், தலைக்கனம் பிடித்தவர் இளையராஜா என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதராணி, புற்றுநோயால் தனது 47 வயதில் காலமானார். அவரின் உடல் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பவதாரணியின் மறைவை அறிந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் யுவன் சங்கர் ராஜா உட்பட பலரும் கண்ணீர் மல்க இளையராஜாவின் வீட்டிற்கு வருகை தந்தனர்.
கணவர் பற்றி வெளியான தகவல்
2005 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் வைத்து பாடகி பவதாரணிக்கும் பிரபல விளம்பர தொழிலதிபர் சபரி ராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இவர்களுடைய ரிசப்ஷன் சென்னையில் உள்ள மேயர் ராமநாதா திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பத்திரிக்கையாளரான எஸ் என் ராமச்சந்திரன் மகன் தான் சபரிராஜ். இந்த தம்பதிகளுக்கு இன்றுவரை குழந்தை இல்லை என்பது வருத்தமான ஒன்றாகும்.