நடிகை சத்யாப்ரியா
ஜீ தமிழின் நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலில் சூர்ய பிரகாஷின் அம்மாவாக நடித்து கலக்கி வருகிறார் நடிகை சத்யப்பிரியா. ஆந்திராவை சேர்ந்தவர். விஜயநகரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். சிறு வயதிலேயே முறைப்படி நாட்டியம் கற்றுள்ளார்.
1000த்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். கல்லூரி படித்தபோது டிராமாக்களில் நடித்து மாநில அளவில் பல பரிசுகளை வென்றுள்ளார். முதன் முதலில் 1974ல் பாலக் துருவ் என்ற ஹிந்தி படத்தில் வில்லியாக அறிமுகமானார். பிறகு மலையாள படங்களில் நடித்து வந்தார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு வரை இவரது பெயர் சத்யவதி தான்.
சத்யபிரியாவாக தமிழில் முதல் அறிமுகம் 1975ல் வெளியான ‘மஞ்சள் முகமே வா’ திரைப்படம் தான். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து படங்களில் தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளது. இவள் ஒரு சீதை, முதல் இரவு, மாம்பழத்து வண்டுகள், தீபம் படத்தில் சிவாஜியுடன் வில்லி கேரக்டர் என பல படங்களில் நடித்தார்.
கன்னடம், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் சக்ராயுதம் இவரது முதல் படம். குறுகிய காலத்திலேயே 50 திரைப்படங்கள் நடித்தார். பிறகு 1979 ஆண்டு கன்னட தயாரிப்பாளர் முகுந்தன் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நீங்களே பாருங்க
சத்யப்ரியா நடித்த மிகவும் பிரபலமான படங்கள் ரோஜா, பாஷா மற்றும் படையப்பா. வேனல்மரம், சித்திரம் பேசுதடி, கடம்ப, கோகர்ணா, லஹிரி லஹிரி லஹிரிலோ, கோடிகொப்பா, தேவதை மற்றும் டில்லிவாலா ராஜகுமாரன் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் சில. நெஞ்சிலே, உன்னை நினைத்து போன்ற படங்களிலும் தோன்றியுள்ளார்.