ரச்சிதா மகாலட்சுமி
சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார்.
இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது.
2 ம் திருமணம்..?
இந்நிலையில் நடிகை ரச்சிதா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது.
இதனை அடுத்து ரச்சிதாவிற்கு இரண்டாவது திருமணமா? மாப்பிள்ளை யார்? என்பது போல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு வரும் ரசிகர்களுக்கான பதிவு தான் இது. இந்த பதிவில் யார் மாப்பிள்ளை என்பதை நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த ஆண்டுகளிலேயே தகவல்கள் வெளி வந்தது. இந்நிலையில் திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்து இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து வருகிறார் என்ற செய்தியும் வெளி வந்தது.
இந்தப் படம் வெளி வந்த உடனேயே அவர் திருமணம் செய்து கொள்வார். அதுவும் இரண்டாவது திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இவர் நடித்த முதல் படம் வெளியாக இருக்கும் நிலையில் கன்னட இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.