பொங்கல்
உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில் சூரிய பகவான் மகர ராசியில் தனது பயணத்தை தொடங்குகிறார். மகர மாதமாகவும் தை மாதம் அழைக்கப்படுகிறது.
இயற்கைக்கு நன்றி சொல்லி வணங்கினால் பொங்கல் பொங்குவது போல வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். தை பொங்கல் திருநாள் தமிழ்நாட்டில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளில் நாம் பயிர்கள் செழிக்க உழவு செழிக்க உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கு நன்றி கூற வேண்டும்.
மழைக்குக் காரணமான இந்திரன், பயிர் நன்றாக வளர்ந்து தானியங்கள் அதிகமாக விளைவதற்கு காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் பொங்கல் பண்டிகை காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது.
வைரலாகும் போட்டோஸ்
அதன்படி தற்போது தமிழ் சினிமா இயக்குனர்களின் தைத்திருநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.