பொங்கல்
உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில் சூரிய பகவான் மகர ராசியில் தனது பயணத்தை தொடங்குகிறார். மகர மாதமாகவும் தை மாதம் அழைக்கப்படுகிறது.
இயற்கைக்கு நன்றி சொல்லி வணங்கினால் பொங்கல் பொங்குவது போல வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். தை பொங்கல் திருநாள் தமிழ்நாட்டில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளில் நாம் பயிர்கள் செழிக்க உழவு செழிக்க உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கு நன்றி கூற வேண்டும்.
மழைக்குக் காரணமான இந்திரன், பயிர் நன்றாக வளர்ந்து தானியங்கள் அதிகமாக விளைவதற்கு காரணமான சூரியன், இந்திரனுடைய சகோதரன் உபேந்திரன் ஆகியோர்களுக்கு நன்றி கூறும் விதமாகவும் பொங்கல் பண்டிகை காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது.
வைரலாகும் போட்டோஸ்
உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நடிகர்கள் தங்களது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். அவர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.