நடிகை ரம்பா
90’ஸ் களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. உழவன் படத்தில் பிரபுவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ரம்பாவிற்கு சுந்தர் சி யின் உள்ளத்தை அள்ளித்தா படம் சிறப்பாக கைக்கொடுத்தது. இந்த படத்தில் உடையை காற்றில் பறக்கவிட்டு, தொடையழகை காட்டி அழகிய லைலா பாடலுக்கு டான்ஸ் ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பினார்.
இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்துடன் அருணாச்சலம், கமலுடன் காதலா காதலா, விஜயுடன் நினைத்தேன் வந்தாய், விஜய்காந்த், அர்ஜுன், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த ரம்பா, கடந்த 2010ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்துக் கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.
இதை யாருமே எதிர்பார்க்கல..
இப்படி இருக்கும் நிலையில் 47 வயதில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லியுள்ளார் ரம்பா.அது என்னவென்றால் நடிகை ரம்பா மீண்டும் நடிக்க வர உள்ளாராம் . மேலும் குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களைப் பார்த்துக் கொள்வதற்காக தான் நடிப்பதை நிறுத்தினாராம் நடிகை ரம்பா.
இப்போது அவர்கள் எல்லாம் வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க வரலாம் என்று, முடிவெடுத்துள்ளாராம் நடிகை ரம்பா . குறிப்பாக தற்போது நல்ல கதாபாத்திரம் அமைந்தால் உடனே ஓகே சொல்லி விடுவேன் என்று கூறியுள்ளார் நடிகை ரம்பா .
இதை பார்த்த ரசிகர்கள் இவர் திடீர்னு நடிக்க வருவார் என யாருமே எதிர்பார்க்கல என்று கூறி வருகின்றனர்.