ஹர்த்திகா
சினிமா முதல் சீரியல் பயணம் குறித்து கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ஹர்த்திகா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜீ சோசியல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
அந்த அந்த வகையில் பல வருடங்களாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்திருந்தவர் கார்த்திக் ராஜ்.இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவர் பிரேக் எடுத்துக்கொண்டார்.
தற்போது இவர் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை ஜீ என்ற புது சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்கிறார்.
மேலும், கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் ஹர்த்திகா நடிக்கிறார். இந்த சீரியலின் கதாநாயகன் கார்த்திக் பற்றி அனைவரும் அறிந்ததே. ஆனால், கதாநாயகி ஹர்த்திகா புதிது. தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் ஹர்த்திகா.
வாழ்த்து மழையில் ரசிகர்கள்..
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ஹர்த்திகா . அந்தப் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப், பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஹர்த்திகா. தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .
இதை பார்த்த ரசிகர்கள் கார்த்திகை தீபம் ஹர்த்திகாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.