திவ்ய தர்ஷினி
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான திவ்யதர்ஷினி மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்காகவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. மேலும் இவர் ஆனந்த விகடனின் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை பெற்றிருக்கிறார்.
அவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். எத்தனையோ பல தொகுப்பாளர்கள் வந்தாலும், இவருக்கென ஒரு தனி இடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. திறமை, சுட்டித்தனமான பேச்சு, அழகு போன்றவற்றால் அனைவரையும் கவர்ந்தார்.
நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவரால் நீண்ட நேரம் நின்று வேலை பார்க்க முடியாது.
மேலும் உச்சகட்ட நடிகர் நடிகைகளே இவர்தான் தங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறும் அளவுக்கு அற்புதமான பேச்சுத் திறனை கொண்டிருப்பதால் இவருடைய பேன்கள் உலக அளவில் உள்ளார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் சின்னத்திரை சீரியல்களிலும், சினிமாவிலும் நடித்திருக்கிறார்.
வெளியிட்ட தகவல்
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் குறித்து அவ்வப்போது இணையத்தில் தகவல்கள் வெளியாவது வாடிக்கை. இந்நிலையில், இப்படியான செய்திகள் குறித்து பிரபல நடிகையும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் உடன்பிறந்த சகோதரியுமான பிரியதர்ஷினியிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியவில்லை.. இப்பொழுது எனக்கு திருமணம் ஆகிறது என்றால் எனக்கு இன்னாருடன் திருமணம் ஆகிறது அதனை நான் கூறப்போகிறேன்.
அதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது.. எழுதுபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதனை படிப்பவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது..? என்ற கேள்வி எல்லாம் எனக்குள் எழும்.. ஆனால்.. தற்போது இப்படி ஆன கேள்விகளை இப்படியான செய்திகளை எல்லாம் கடந்து செல்ல நாங்கள் பழகிவிட்டோம் என கூறியிருக்கிறார் நடிகை பிரியதர்ஷினி.