நடிகை ரோஜா
1992ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ரோஜா. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இவர். இவரது முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கினர் நடிகை ரோஜா.
ரஜினி, கார்த்திக், பிரபு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ள ரோஜா 90 இல் முன்னணி நடிககைகளில் ஒருவராக இருந்தவர். இந்நிலையில் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனர் ஆர்.கே செல்வமணியை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்ததும் நடிகை ரோஜாவின் மகள் அம்மாவைப் போலவே நடிக்க வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பாராட்டுக்கள்
அந்த வகையில் தற்போது ஆந்திராவில் அமைச்சராக இருந்து வரும் ரோஜா கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரின் குடும்பத்திற்கு சென்று கேக் வெட்டி கொண்டாடியது மட்டுமில்லாமல் அவருக்கு இரண்டு லட்சத்தை
பரிசாக வழங்கியிருக்கிறார் . இதைப்பார்த்த ரசிகர்கள் ரோஜாவின் செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது.