டாப்ஸி
2010ஆம் ஆண்டு “சும்மாண்டி நாதம்” என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானவர் டாப்ஸி பன்னு. முன்னதாக இவர் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இவர் தமிழில் 2011ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய “ஆடுகளம்” படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து வந்தான் வென்றான், வலை, முனி 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாப்ஸி தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். ஹிந்தியில் “பிங்க்” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது.
இதையடுத்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த “சபாஷ் மிது” படத்தில் மிதாலி ராஜாக டாப்ஸி நடித்து அசத்தியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் “அனபெல் சேதுபதி” படத்தில் நடித்திருந்தார்.
கழட்டிவிட்ட மாணவன்
சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது முதல் காதல் குறித்த அனுபவத்தை குறித்து பேசியுள்ளார். என்னுடைய முதல் காதல் பள்ளிநாட்களில் தான் துவங்கியது. நான் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது 10 வகுப்பு மாணவர் ஒருவரை உருகி உருகி காதலித்தேன்.
அத சமயத்தில் நினைத்த நேரத்தில் பேசும்படி செல்போன் எல்லாம் இல்லை. தெரு முனையில் இருக்கும் டெலிபோன் பூத்திற்கு சென்று தான் பேசவேண்டும். முதலில் அவருக்கும் என் மீது இன்ட்ரெஸ்ட் இருந்தது. பின்னர் நான் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று என் காதலை உதறிவிட்டார்.
என்னையும் படிப்பில் கவனம் செலுத்த சொன்னான். அதனால் அந்த காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அதன் பின்னர் நான் மிகவும் அழுதேன். அந்த நினைவுகளில் இருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றார்.