சாய்பல்லவி
தென்னிந்திய அளவில் பிரபல நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். பின், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ஹீரோவிற்கு ஜோடியாக மட்டும் நடிக்காமல், கதையின் நாயகியாகவும் இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த கார்கி படம் கூட பாராட்டை பெற்றது.
இதை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் துவங்கியது.
அங்கத்தையும் விரும்பி ரசிப்பேன்…
இந்நிலையில் சாய்பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு ஆண்களை விட எனக்கு பெண்களை தான் அதிகம் பிடிக்கும்.
ஒவ்வொரு பெண்களும் வித்யாசமான உடை அணிவது, வித விதமாய் ஹேர்ஸ்டைல் செய்வது, கண் அழகு என ஒவ்வொன்றையும் நான் ரசிப்பேன். ஆனால், ஆண்கள் என்றால் அப்படி இல்லை பேண்ட் சட்டை அவ்வளோவ் தான். எனவே பெண்கள் ஆண்களை காட்டிலும் ஒவ்வொரு விஷயத்திலும் அழகு என சாய்பல்லவி அந்த பேட்டியில் கூறினார்.