நடிகர் கிஷோர்
பெங்களூரில் கல்லூரியில் படிக்கும்போதே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர் கிஷோர். அதோடு கன்னட இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2004-ல் வெளியான ‘காந்தி’ (Kanti) என்கிற கன்னடப் படத்தின் மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த துணை நடிகருக்கான கர்நாடக அரசின் மாநில விருதை வென்றார்.
013-ல் ‘என்.ஹெச்4’ திரைப்படம் வெளியானது. வெற்றிமாறன் தயாரிப்பில் அவருடைய நண்பரும் துணை இயக்குநருமான மணிமாறன் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இந்தப் படத்தைத் தான் ‘தேசிய நெடுஞ்சாலை’ என்ற தலைப்பில் தன் முதல் திரைப்படமாக இயக்கத் திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன்.
அந்தப் படத்தில் தப்பிச் சென்ற காதலர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க கன்னடமும் தமிழும் பேசத் தெரிந்த ஒரு நடிகரைத் தேடியபோது கிஷோரை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினார்.
ஆனால் வெற்றிமாறனின் முதல் படமாக ‘பொல்லாதவன்’ கதை தேர்வாக அதில் செல்வம் கதாபாத்திரம் கிஷோருக்கு வழங்கப்பட்டது. கிஷோர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்தது இப்படித்தான் அதன் பிறகு வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வட சென்னை’ படங்களிலும் முக்கியமான வேடங்களில் கிஷோர் நடித்திருக்கிறார்.
போட்டோக்கள்
இப்போது தம்பதியினர் தங்கள் குழந்தைகளையும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தியுள்ளனர் மற்றும் குடும்ப புகைப்படங்களை நெட்டிசன்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர். விசாலாக்ஷி, பெங்களூரு நகரத்திற்கு கரிமப் பொருட்களை வழங்கும் ‘எருமை பேக் கலெக்டிவ்’ நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
தம்பதிகள் தங்கள் பண்ணை இல்லத்திற்கு பார்வையாளர்களை அழைத்து இயற்கையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் இயற்கை வாழ்க்கையை ஊக்குவிக்கின்றனர்.