குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின்னர் மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி.
கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 40 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார்.
கண்ணீர்
இந்நிலையில் சமீபத்தில் நடிகை அபிராமி மீண்டும் எண்ட்ரி கொடுத்து பேட்டிகளை கொடுத்து வருகிறார். சமீபத்திய பேட்டியொன்றில், கமல் விக்ரம் படத்தின் 50 நாள் கொண்டாட்டத்தில் நடிகை அபிராமி பற்றிய சில உண்மைகளை கூறியிருந்தார்.
இதனை அந்த பேட்டியில் போட்டுக்காட்டப்பட்டது. அவர் பேசிய வார்த்தைகளை கேட்டு ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பயில்வான் ரங்கநாதனை திட்டியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.