நடிகர் முத்து காளை
தமிழ் சினிமாவில், ஒரு சில படங்களில் நடித்தாலும் தன்னுடைய திறமையால் விரைவாகவே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் முத்து காளை. இவர் முன்னணி காமெடி நடிகர்களுக்கு நிகராக வளர்ந்து வந்த வேளையில், தொடர்ந்து குடியில் மூழ்கி இருந்ததால், முன்னணி காமெடி நடிகர் என்கிற இடத்தை பிடிக்காமலே வந்த வேகத்தில் காணாமல் போய்விட்டார்.
பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு பயணத்தை தொடங்கினார். அவர் தனது நண்பர்களுடன் தங்கி தனது வாழ்க்கைக்காக கடினமாக உழைத்தார். அவர் கூறுகையில், சினிமாவில் போராளியாக நடிக்க சென்னை வந்தேன். இவர் முதலில் ஸ்டண்ட் நடிகராக அறிமுகமானார்.
50க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றியுள்ளார். அவர் ஸ்டண்ட்மேனாக தனது வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு, ஏவிஎம் ஸ்டுடியோவில் இரண்டு ஆண்டுகள் தச்சராகப் பணியாற்றினார்.
தற்போது இவரை சிறு பட்ஜெட் படங்களில் கூட காண முடியவில்லை. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடிவேலுவுடன் நடிக்க தொடர்ந்து வாய்புகள் வந்தது. அப்போது பணம், மற்றும் பட வாய்புகள் தொடர்ந்து வந்ததால், அல்வா வாசுவுடன் சேர்ந்து எந்நேரமும் குடித்து கொண்டே இருந்தாராம்.
போட்டோக்கள்
1997 ஆம் ஆண்டு வெளிவந்த விஜய் நடித்த காதலுக்கு மரியதை திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட்மேனாக அவர் நடித்த முதல் படம். சேது, வேலை மற்றும் பல படங்களில் முத்துவுக்கு ஸ்டண்ட்மேனாக நடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. எஸ்.பி.ராஜ்குமார் இயக்கிய பொன்மனம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
முத்து காளைக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். தற்போது அவரது திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.