ரேகா நாயர்
சின்ன திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா நாயர். பல காலங்களாக இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பல பேட்டிகளில் இவர் தொடர்ந்து சினிமா குறித்து பல சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பெண்களுக்கு இருக்கும் அவல நிலை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தன.
குறிப்பாக ரேகா நாயரின் நடிப்பை சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
ஓப்பன் டாக்
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள் தங்களை படுக்கைக்கு அழைத்தவர்கள் மீது புகார் கொடுப்பதை எப்படி பார்க்கிறேன் என பேசினார். பட வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்கிறீர்கள்… அல்லது பகிர்ந்து கொள்ளவில்லை.. என்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
ஆனால், பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொண்டு பட வாய்ப்பு பெற்று விட்டு சம்பளத்தையும் பெற்றுவிட்டு ஒரு பத்து வருடம் கழித்து எனக்கு பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது.. என்னை அறைக்கு அழைத்தார்கள்.. என்றெல்லாம் புகார் கூறுவதன் மூலம் என்ன கூற விரும்புகிறீர்கள்.
உங்களை படுக்கைக்கு அழைத்த போது நீங்கள் உங்களுக்காக நியாயத்தை கேட்டிருக்க வேண்டும். அப்பொழுது எல்லாம் விட்டுவிட்டு.. மார்க்கெட் அவுட் ஆகி.. பட வாய்ப்புகள் இனிமேல் கிடைக்காது.. என்ற நிலையில் தான் இப்படியான விஷயங்களை வெளியே கூறுகிறீர்கள்.
ஆனால், படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் யாரும் இப்படியான புகார்களை தெரிவிப்பதில்லை.. பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து விட்டு பத்து ஆண்டுகள் கழித்து புகார் கூறினால் சரியாக போய் விடுமா..? என பேசி இருக்கிறார்கள்.