நடிகை பூர்ணா
நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தமிழ் சினிமாவின் அடுத்த அசின் என இளையதளபதி விஜய் கூட ஒருமுறை பூர்ணாவை பாராட்டியுள்ளார். இதை தொடரந்து அருள்நிதி நடிப்பில் வெளியான தகராறு திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை
அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. கடைசியாக இவர் தமிழில் நடித்த திரைப்படம் சவரக்கத்தி.
அதிர்ச்சி தகவல்
நடிகை பூர்ணா திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயும் ஆகிவிட்டார். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு கடைசியாக அவர் நடித்த திரைப்படம் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம்.
இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பூர்ணா. இந்த படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாக அமைந்த ஒரு விஷயம் என்ன என்று கேட்டால் அது நடிகை ஆண்ட்ரியா இந்த படத்தில் உடம்பில் பொட்டு துணி இன்றி சில நிமிட காட்சிகளில் நடித்திருக்கிறார் என்ற தகவல் தான்.
மறுபக்கம் அந்த காட்சியில் நடித்த நடிகை ஆண்ட்ரியாவும் நீங்க மட்டும் பார்க்கத்தான் நான் அப்படி நடித்தேனா.. என்று மிஷ்கினிடம் சண்டை போட்டார் என்ற தகவலும் கிசுகிசுக்கப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க இது குறித்து இந்த படத்தில் நடித்திருந்த நடிகை பூர்ணாவிடம் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பூர்ணா அளித்த பதில் ரசிகர்களை அதிர்ச்சி ஆழ்த்தி இருக்கின்றது.
அவர் கூறியதாவது, நடிகை ஆண்ட்ரியா பிசாசு படத்தில் ஆடை இன்றி நடித்தாரா..? அந்த படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது…? என அனைத்துமே எனக்கு தெரியும். ஆனால், நான் அந்த விஷயத்தை கூறுவது சரியாக இருக்காது. அதே சமயம் அந்த காட்சி வழக்கமான காட்சிகள் இல்லாமல் திகில் நிறைந்த வித்தியாசமான காட்சியாக இருந்திருக்கிறது என்பதும் இவருடைய பேச்சுக்கள் மூலம் தெரிகிறது.
தொடர்ந்து பேசிய பூர்ணா என்னையும் ஆடையின்றி சில படங்களில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். என்னால் அப்படி என காட்சிகளை நிச்சயமாக நடிக்கவே முடியாது. கண்டிப்பாக நான் அப்படியான காட்சிகளில் நடிக்க மாட்டேன். ஆடை இன்றி நடிப்பது அதற்கு ஒரு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அந்த தைரியம் எனக்கு கிடையாது. எனவே நான் அப்படியான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறியிருக்கிறார்.