நடிகை விசித்ரா
தமிழ் சினிமாவில் கடந்த 1992ஆம் ஆண்டு “சின்னதாய்” என்ற திரைப்படத்தில் “பொன்னம்மா” என்கின்ற சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். சிறு கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திய அவர்களுக்கு அடுத்த திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் முத்து திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இத்திரைப்படத்தில் நடிகர் செந்தில் மற்றும் கவுண்டமணி அவர்களை தன் பின்னால் சுற்ற வைப்பார். மிகவும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை விசித்ரா தொடர்ச்சியாக நடிகர் விஜய் அவர்களுடன் “ரசிகன்” திரைப்படத்திலும் நடித்து இருந்தார். கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை விசித்ரா அவர்கள் பலருக்கும் கவர்ச்சி கன்னியாக காட்சி அளிக்கப்பட்டார்.
இவர் தமிழ் சினிமாவில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் கடைசியாக 2001ஆம் ஆண்டு “கிருஷ்ணா கிருஷ்ணா” என்ற திரைப்படத்தில் “ருக்குமணி” என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதான் அவருக்கு கடைசி திரைப்படம்.
நொறுங்கி போன ரசிகர்கள்
பிக் பாஸ்ஸில் கொடுத்த பூகம்பம் டாஸ்க்கில் விசித்ரா கூறியிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 2001 ஆம் ஆண்டு டாப் ஹீரோ ஒருவரின் படத்தின் ஷூட்டிங்கின் போது தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை பகிர்ந்தார். இது சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமின்றி மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த டாப் ஹீரோ, தன்னை ரூமுக்கு வருமாறு அழைத்ததாகவும், தான் வரவில்லை என்பதால் தினமும் குடித்து விட்டு வந்து ரூம் கதவை கட்டுவதை வழக்கமாக கொண்டதாக தெரிவித்தார். அந்த ஷூட்டிங் ஷெட்யூல் முழுக்க நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையிலும் தங்கினேன். மேலும், இந்த விஷயத்தில் நான் நடந்துக்கொண்ட விதத்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டது.
காட்சி ஒன்றில் ஃபைட்டர்ஸ் ஒருவர் என் மீது அத்துமீறி நடந்து கொண்டார். நான் சம்பந்தப்பட்ட ஆளை பிடித்து ஸ்டண்ட் மாஸ்டரிடம் புகார் சொன்னபோது, அவர் அப்பிரச்சினையில் என் கன்னத்தில் பளார் என அறை விட்டார்.
எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. உடனடியாக நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நடிகர் சங்கத்திடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்களோ போலீசுக்கு செல்லாமல் இங்கு ஏன் வந்தாய் என கேட்டார்கள்.
மேலும் இதெல்லாம் ஒரு விஷயம்ன்னு எடுத்துகிட்டு இருக்க போய் வேலையை பாரு என அப்போது இருந்த தலைவர் சொன்னது இப்போதும் நியாபகம் இருக்கிறது. நான் சினிமாவை விட்டு விலக அப்பிரச்சினையே காரணமாக அமைந்தது என தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.