செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. சமீபத்தில் முன்னணி நடிகையான ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.
சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா லிஃப்ட்டிலிருந்து வெளியே வருவது போன்ற போலியான வீடியோ ‘Deepfake Video’ ஒன்று வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க, அதேபோல நடிகை கத்ரீனா கைஃபின் போலியான வீடியோவும் வைரலானது.
டெல்லி காவல்துறை, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து இந்த வீடியோக்களின் ‘URL’-யைக் கண்டுபிடித்து அதை நீக்குவதற்காக உடனடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
வீடியோ
இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ deep fake மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பிரபலமான ரோஸி பிரீனின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.