நடிகை ஸ்ரித்திகா
கடந்த 1986 ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்தவர் நடிகை ஸ்ரித்திகா. தமிழில் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பான கலசம் என்ற செய்திகளில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நாதஸ்வரம் என்ற சீரியலில் மலர் கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு ரசிகர் மத்தியில் முன்னணி நடிகையாக அறியப்பட்டார்.
அதன் பிறகு மாமியார் தேவை, உறவுகள், சங்கமம், வைதேகி, உயிர்மெய், குலதெய்வம், கல்யாண பரிசு 2 அழகு உள்ளிட்ட செயல்களில் நடித்திருக்கிறார்.
இவர் தொகுப்பாளினியாகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய காதலன் சநீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட
இவர் தங்களுடைய காதல் அனுபவங்கள் பலவற்றை நேர்காணல் ஒன்றில் பதிவு செய்து தன்னுடைய முகத்தில் புன்னகையை ததும்ப விட்டிருந்தார். இவருடைய கணவர் சநீஸ் வேறு யாரும் அல்ல நடிகை ஸ்ரித்திகாவின் அக்கா கணவருடைய நண்பர்தான்.
வெளிப்படையான பேச்சு
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் தன்னுடைய அழகின் ரகசியம் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். அதில் அவர் கூடிய விஷயங்கள் பெண்களுக்கு சிறந்த அழகு குறிப்பாக அமைந்துள்ளது. அவர் கூறியதாவது, எப்போதும் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்றால் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும்.
எந்த சோகமாக இருந்தாலும், எந்த கஷ்டமாக இருந்தாலும் சோகமான இருப்பது உடலுக்கும் கேடு மனதிற்கும் கேடு மற்றும் இல்லாமல் முக அளவிற்கு இருக்கும் கேடு விளைவிக்கும்.
சோப்பு பயன்படுத்தியதே கிடையாது. அப்படியே பயன்படுத்தினாலும் இவை இல்லாத நேரங்களில் தான் சோப் பயன்படுத்துவேன். எனவே பெண்கள் தங்கள் சரும அழகை பேண வேண்டும் என்றால் வேதிப்பொருட்கள் நிறைந்த சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
முடிந்தால் இயற்கையான சோப்புகள் மற்றும் அல்லது பச்சை பயிறு மாவு, பாதாம் மாவு, கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்தி குளிப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என கூறியிருக்கிறார்.