எதிர்நீச்சல் ஹரிப்பிரியா
1995 ஆம் ஆண்டு பிறந்தவர் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சீரியல்களில் நடித்து பிரபலமானவர். அப்பாவி மருமகளாக எதிர்நீச்சலில் கலக்கி வரும் ஹரிப்ரியா இசை டைமிங்கில் அடிக்கும் காமெடிகளும், பஞ்ச்
டயலாக்குகளும் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. இதனை அடுத்து இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உருவாகிவிட்டது என்று கூறலாம்.
இவர் சக சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்தவர் என்பதை குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகர் விக்னேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
இந்நிலையில் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் இதற்கு முக்கியமான காரணம் பிரபல தொகுப்பாளர் அசார் என்று கூறப்பட்டது. இதுவரை 12-க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள ஹரிப்பிரியாவுக்கு சன்டிவியின் ப்ரியமானவள் சீரியல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஓப்பன் டாக்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த 2022 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கிக் கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் இந்த சீரியலில் ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த சீரியல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஹரிப்பிரியா இந்த சீரியலை பொருத்தவரை எங்களுக்கு எந்த கருத்தோ..? அல்லது ஆலோசனையோ..? கொடுப்பது கிடையாது. ஏனென்றால் அதைவிட சிறப்பாக இயக்குனர் திருச்செல்வம் யோசித்து வைத்திருப்பார். வசனங்களாக இருக்கட்டும் காட்சி அமைப்பாக இருக்கட்டும் எதையுமே நாங்கள் இடையூறு செய்ய மாட்டோம்.
இயக்குனர் சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நடித்துவிட்டு இருப்பதே மிகப்பெரிய விஷயமாக இருக்கும். அந்த அளவுக்கு அந்த சீரியல் கதையுடன் இயக்குனர் மற்றும் வசனகர்த்தா ஆகியோர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு செய்வோம். அந்த அளவுக்கு தெளிவாக அவர்களுடைய வேலை இருக்கிறது என பதிவு செய்திருக்கிறார்.