ரகுல் பிரீத் சிங்
தமிழ் சினிமாவில் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதனை தொடர்ந்து அவர் கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ என்ற படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் அப்படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமாகாத அவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அப்படங்களை அடுத்து அவர் தேவ், நடிகர் சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்தார். நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கார்த்திக் ஜோடியாக “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை பெற்றார். இந்த படத்திற்கு பின்னர் ரகுல் ப்ரீத் சிங்கை ரசிகர்கள் அணுஅணுவாக ரசிக்க தொடங்கினார். இவரது கண்பார்வை முதல் எக்ஸ்பிரஷன்ஸ் வரை அனைத்தையும் ரசித்தனர்.
ஓபன் டாக்
நடிகை ரகுல் பிரீத் சிங் பேட்டி ஒன்றில் ஆணுறை குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார். திடீரென இவர் ஆணுறை பற்றி பேசுவதற்கு என்ன காரணம்..? என்று கேட்டால் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சத்ரிவாலி என்ற திரைப்படத்தில் ஆணுறை பரிசோதனை செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.
இது குறித்து பேசிய ரகுல் ப்ரீத் சிங் ஆணுறை என்பது ஒரு அடிப்படை தேவை. தேவையற்ற கர்ப்பம் மற்றும் உடல் நல பிரச்சனைகளை வரும் முன்பே தடுப்பதற்கு உண்டான ஒரு கருவி. இதனை பயன்படுத்துவதோ..? அல்லது கடைகளில் சென்று வாங்குவதிலோ.. எந்த ஒரு கூச்சமும் யாருக்குமே தேவையில்லை.
பொதுவாக இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் தயக்கம் காட்டுகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. அது தேவையில்லை. பெண்களுக்கான பெண்ணுறைகள் கூட கிடைக்கின்றன. எனவே அதனை வாங்கி சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார் ரகுல் பிரீத் சிங்.