நடிகை அமலா
தமிழ் சினிமாவில் 1986 ஆம் ஆண்டு வெளியான ‘மைதிலி என்னை காதலி’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா.
அதனை தொடர்ந்து அவர் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வேலைக்காரன், மாப்பிள்ளை, சத்யா, வெற்றி விழா, அக்னி நட்சத்திரம், நாளைய மனிதன், வேதம் புதிது என அடுத்தடுத்ததாகப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் 1992 ஆம் ஆண்டு முன்னணி நடிகரான நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதில் இருந்து விலகினார்.
வெளியிட்ட தகவல்
இந்நிலையில் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய அமலா, தற்போது விலங்குகளின் மேலிருக்கும் ஆர்வத்தால் புலு கிராஸ் ஒன்றை நடத்தி வருகிறார். இதன்படி இவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அப்பேட்டியில் அமலா, “சினிமாவில் நடிப்பதற்கு முன்பு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது சாப்பாடுக்கு வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தான் காலேஜ் பீஸ் கட்டுவேன். அச்சமயத்தில் விஜயகாந்த் அவர்கள் தான் எனக்கு உதவி செய்தார்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.