நடிகை பிரியங்கா ஜெயின்
பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்கப்பட்ட தொடர்கள் தான் ராஜா ராணி, சின்னதம்பி,நாம் இருவர் நமக்கு இருவர்,மௌன ராகம் என பல தொடர்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.
குறிப்பாக தமிழில் ஒளிபரப்பான காற்றின் மொழி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார். கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்பட துறையில் பணிபுரிந்திருக்கும் இவர் கன்னடத்தில் வெளியான கோலிசோடா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கில் மௌனராகம் என்ற சீரியலில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக மாறினார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரியங்கா, வளர்ந்தது, படித்தது எல்லாமே பெங்களூரில். ஸ்ரீ என்.கே.எஸ் ஆங்கில பள்ளியில் பள்ளி படிப்பையும், ஜெயின் கல்லூரியில் கல்லூரி படிப்பையும் முடித்தார். அழகான, திறமையான, பிரியங்கா எம் ஜெயின் தனது 16 வயதில் திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிரியங்கா, ஃபேஷன் ஷோவிலும் பங்கேற்றுள்ளார். பல இசை ஆல்பங்கள் மற்றும் டி.வி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அதற்கடுத்து 2015 ஆம் ஆண்டில், நிருப் பண்டாரியுடன் இணைந்து, கன்னட த்ரில்லர் திரைப்படமான ’ரங்கிதரங்காவில்’ நடித்தார். இதனை அனுப் பண்டாரி இயக்கியிருந்தார்.
ரசிகர்கள் ஷாக்
தொடர்ந்து தற்பொழுது, தெலுங்கு பிக்பாஸ் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில், நீச்சல் உடையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.