நடிகை பூர்ணா
நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அந்த படம் சரியாக ஓடாததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
தமிழ் சினிமாவின் அடுத்த அசின் என இளையதளபதி விஜய் கூட ஒருமுறை பூர்ணாவை பாராட்டியுள்ளார். இதை தொடரந்து அருள்நிதி நடிப்பில் வெளியான தகராறு திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை
அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. கடைசியாக இவர் தமிழில் நடித்த திரைப்படம் சவரக்கத்தி.
பெருமூச்சு விடும் ரசிகர்கள்
இந்நிலையில், புதிய திரைப்படம் ஒன்றில் நடித்திருக்கும் நடிகை பூர்ணா படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் சிலவற்றிலும் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தெலுங்கு திரைப்படங்களில் படு கிளாமரான காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்த நடிகை பூர்ணா தற்பொழுது மிக மோசமான படுக்கை அறை காட்சி ஒன்றிலும் நடித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படமாக்கப்பட்ட படம் என்றும் தற்போது தான் இது வெளியாவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணத்திற்கு முன்பே நடிகை பூர்ணா நடித்திருந்த இந்த திரைப்படம் தற்போது வெளியாக இருக்கிறது. நடிகை பூர்ணா படு மோசமான படுக்கை அறை காட்சி நடித்துள்ளதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எதிரி கிடைக்கிறது.