பிரவீனா லலிதா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை பிரவீனா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் சன் டிவி தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ப்ரியமானவளே தொடரை அடுத்து சன்டிவியில் ஒளிபரப்பான மகராசி என்ற தொடரில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்தார். பெரும்பாலும் சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது வெள்ளித்திரையிலும் தனது நடிப்புத் திறனை வெளிக்காட்ட முயற்சி செய்து கொண்டுவருகிறார்.
தற்போது வெளிவந்த ஜெயம் ரவி படமான கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் ரசிகர்களயே எளிதில் பிரபலமானார்.
வீடியோ
அவ்வப்போது, தன்னுடைய தோட்டத்தில் விளையக்கூடிய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைப் பறித்து அதனுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக அந்த புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை பிரவீனா.
அந்த வகையில், தன்னுடைய தோட்டத்தில் காய்த்து தொங்கும் குண்டு மாங்காய் இரண்டை ஒரே எகிரில் கையோடு பிடுங்கிய இவருடைய வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.