மஹிமா நம்பியார்
தமிழில் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளியாகி அணைத்து விதமான ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த திரைப்படம் சாட்டை. 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மஹிமா நம்பியார்.
சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.
தற்பொழுது நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ரத்தம் என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை மஹிமா நம்பியார்.
பதிலை பாருங்க
தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வரும் மஹிமா நம்பியார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் காதலித்து திருமணம் செய்து கொள்வீர்களா..? அல்லது காதலித்து திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வீர்களா…? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மஹிமா, கண்டிப்பாக திருமணம் செய்து கொண்டு தான் வாழ்வேன் என்று கூறியிருக்கிறார். மேலும், லிவிங் ரிலேஷன்ஷிப் என்பது அவர் அவரவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால், நம்முடைய கலாச்சாரம் திருமணம் செய்து கொண்ட பிறகு ஒருவருடன் சேர்ந்து வாழ்வதுதான் சரியாக இருக்கும் அதுதான் சட்டபூர்வமானதும் கூட என கூறியுள்ளார்.