ரேகா நாயர்
சின்ன திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரேகா நாயர். பல காலங்களாக இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பல பேட்டிகளில் இவர் தொடர்ந்து சினிமா குறித்து பல சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பெண்களுக்கு இருக்கும் அவல நிலை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்த சர்ச்சைக்குரிய காட்சி குறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் கடுப்பான ரேகா நாயர், திருவான்மியூர் பீச்சிற்கு வாக்கிங் வந்த பயில்வான் ரங்கநாதனுடன் நடு ரோட்டில் வாக்குவாதம் செய்தார். அப்போது அவரை அடிக்க பாய்ந்த வீடியோவும் வெளியாகி சோசியல் மீடியாவில் பேசு பொருள் ஆனது.
சர்ச்சை
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரேகா நாயர், சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், என்னிடம் யாரவது பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்ற பெயரில் படுக்கைக்கு அழைக்கிறார் என்றால் அந்த நபரை பிடித்து இருந்தால் போவேன், அவரை பிடிக்கவில்லை என்றால் போகமாட்டேன்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் போது மறுத்துவிட்டாள் உங்களை வற்புறுத்த போவது கிடையாது. ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு ஒரு 10 வருடம் கழித்து அந்த இயக்குனர், தயாரிப்பாளர் அப்படி செய்தார் என்று கூறுவது எதனால் என கோபமாக பேசிய ரேகா நாயர்